Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கந்து வட்டி கொடுமை: தீக்குளித்த இசக்கி முத்துவும் மரணம்

கந்து வட்டி கொடுமை: தீக்குளித்த இசக்கி முத்துவும் மரணம்
, புதன், 25 அக்டோபர் 2017 (14:11 IST)
கந்து பட்டிக் கொடுமையால் தீக்குளித்த இசக்கி முத்துவும் இன்று மரணம் அடைந்தார்.


 
 
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர்  கடந்த 23ம் தேதி காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். 
 
அதன் பின்னர், நான்கு பேரும் திடீரென ஆளுக்கொரு பக்கம் நின்று தீக்குளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து பலத்த காயங்களுடன் இசக்கி முத்து - சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் சுப்புலட்சுமியும் அன்றே மரணம் அடைந்தனர். 
 
இந்த நிலையில் இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் சட்டசபை தேர்தல்; வெற்றி பெறுமா பாஜக?