Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட செந்தில் பாலாஜி மனு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:14 IST)
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்த நிலையில் விசாரணைக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு விசாரணைக்கு வந்த போது குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை என்றும் காலையில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனு வலியுறுத்தாததால் அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டு உள்ளார். குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கேட்டு காலையில் மனு தாக்கல் செய்த நிலையில் மாலையில் தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments