Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட செந்தில் பாலாஜி மனு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:14 IST)
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்த நிலையில் விசாரணைக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு விசாரணைக்கு வந்த போது குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை என்றும் காலையில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனு வலியுறுத்தாததால் அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டு உள்ளார். குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கேட்டு காலையில் மனு தாக்கல் செய்த நிலையில் மாலையில் தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments