Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

Mahendran

, திங்கள், 8 ஜூலை 2024 (17:59 IST)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி   அமலாக்கத்துறை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.  மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டதால் இன்னும் அவர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் சமீபத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மனு   இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில்  செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு அமலாக்கத்துறை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!