Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் எடப்பாடி மற்றும் ஓ.பிஎஸ் அரசு - சீறும் செந்தில் பாலாஜி (வீடியோ)

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (10:45 IST)
ஒரு பேனரில் கூட மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவிக்க முடியாத அரசு தான் எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ்-இன் அரசு என கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

 
கரூரில் வரும் 18ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், அந்த மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழகத்தின் ஒவ்வொரு உரிமைகளை மத்திய அரசிடம் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு அடமானம் வைத்து வருகின்றது என புகார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

கோவை வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு.. உடன் வந்த நண்பர்கள் சோகம்..!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வேலுமணியும் டெல்லி பயணம்.. அதிமுகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments