Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்வெட்டே இல்லாத தமிழகம்... ஆனால் செந்தில் பாலாஜி வைத்த செக்!

மின்வெட்டே இல்லாத தமிழகம்... ஆனால் செந்தில் பாலாஜி வைத்த செக்!
, செவ்வாய், 29 ஜூன் 2021 (10:02 IST)
தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். 

 
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினம்தோறும் சில மணி நேரங்கள் மின்தடை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த சில மாதங்களாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
மேலும் மின் கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளதாலும், அணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார். இது கடும் விமர்சனங்களுக்கும் கிண்டல் கேலிகளுக்கு உள்ளானது. இதனிடையே தற்போது பராமரிப்புப் பணிகள் முடிந்துள்ள நிலையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது. மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே இனி நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக இனி புகார் கூறக்கூடாது என  குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகிள் மேல 3, பேஸ்புக் மேல 2…! அடுத்தடுத்து புகார்கள்! – கிடுக்கு பிடி போடும் ரஷ்யா!