Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.கே.ஜி.க்கே இருக்கும்போது, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இருக்கக்கூடாதா? அமைச்சர் செங்கோட்டையன்

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (15:37 IST)
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா? என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வு மாணவர்களின் கல்வி சுமையை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ” தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயரவே பொதுத்தேர்வு” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments