Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (22:01 IST)
பேருந்து கல்வீச்சு வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்ற தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது துறையை கவனித்து கொள்வது யார்? என்பது குறித்த ஆலோசனை இன்று நடந்தது.

இந்த ஆலோசனையின் முடிவில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இனி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து கொள்வார்

செங்கோட்டையன் பள்ளிக்கல்வி துறை அமைச்சரான பின்னர் யூனிபார்ம் முதல் பாட திட்டங்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றார். அந்த வகையில் இனி விளையாட்டுத்துறையும் இவரது கையில் இருப்பதால் தமிழக விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளுக்கு நன்மையாக இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments