அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர்கள் அணில் போல உதவ வேண்டும்" - செல்லூர் ராஜூ

Siva
திங்கள், 22 செப்டம்பர் 2025 (10:38 IST)
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ராமன் பாலம் கட்ட அணில் உதவியது போல, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இன்று மதுரையில் கட்சியின் இளைஞரணி மற்றும் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியபோது, ‘அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும். எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, உண்மைகளை எடுத்துரைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
செல்லூர் ராஜுவின் இந்த உவமை, சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது பேச்சை ஆதரித்து பேசியுள்ள நிலையில், வேறு சிலர் இந்த உவமை பொருத்தமற்றது என்று விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த பேச்சு கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments