Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா, தீபக் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்: செல்லூர் ராஜூ

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (16:51 IST)
இந்த ஒன்றை மட்டும் செய்தால் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேட்கா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து சென்னை மாவட்ட கலெக்டர் சமீபத்தில் வேதா இல்ல சாவியை தீபக் மற்றும் தீபாவிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதுகுறித்து கூறிய போது, வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற தீபா மற்றும் தீபக் தாமாக முன்வந்து அனுமதி அளித்தால் வரலாற்றில் இடம்பெறுவார்கள் என்று கூறினார்.
 
மேலும் ஜெயலலிதா நினைவு இல்லமாக வேதா இல்லத்தை மாற்றினால் இந்தியா மட்டுமின்றி உலக சுற்றுலா பயணிகளும் சுற்றி பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments