Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபா, தீபக் வசமானது வேதா இல்லம் - சாவி ஒப்படைப்பு!

தீபா, தீபக் வசமானது வேதா இல்லம் - சாவி ஒப்படைப்பு!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:36 IST)
முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா எல்லாம் சமீபத்தில் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வந்த நிலையில் வேதா இல்லத்தை தீபக் ஏற்றும் தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. 
 
தீர்ப்பின் படி முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
மேல்முறையீடு செய்ய தமிழக அரசு அக்கறை காட்டாததால் அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்வதாக மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குன்னூர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – தமிழக காவல்துறை எச்சரிக்கை!