Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா என்ற ஒருவர் பிறந்த வரலாறே தெரியாமல் போயிருக்கும்: செல்லூர் ராஜூ அடுத்த அதிரடி!

Webdunia
ஞாயிறு, 21 ஜனவரி 2018 (15:01 IST)
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த ஆட்சியில் அதிகம் பிரசித்தி பெற்றவர். அவரது தெர்மாக்கோல் திட்டத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். அதன் பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் அண்ணா என்ற ஒருவர் பிறந்த வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்ற தகவலை கூறினார்.
 
மதுரையில் நடந்த எம்ஜிஆர் 101-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் தான் தொடங்கிய கட்சியின் கொடியில் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்தைப் பொறித்தார். தான் ஏற்றுக்கொண்ட தலைவனின் உருவத்துடன் கூடிய கொடியைக் கொண்ட ஒரே இயக்கம் அதிமுகதான் என்றார். மேலும் எம்ஜிஆர் மட்டும் அதிமுகவைத் தொடங்காமல் இருந்திருந்தால், அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments