Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான முடிவு எடுத்திருக்கிறார் ரஜினி: சீமான் பாராட்டு!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (13:04 IST)
கட்சி தொடங்குவது குறித்த ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.

2017ல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் தற்போது அரசியலில் நுழைவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் முக்கியமான மூன்று விதிமுறைகளை கூறியுள்ளார். அவரது இந்த முடிவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான் ”திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!” என்று கூறியுள்ளார்.

இத்தனை நாட்களாக பல்வேறு இடங்களில் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து மறைமுகமாக விமர்சித்து வந்த சீமான் தற்போது ஆதரித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments