Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும்… சீமான் பிரச்சாரம்!

Advertiesment
சர்வதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும்… சீமான் பிரச்சாரம்!
, திங்கள், 22 மார்ச் 2021 (12:38 IST)
அன்பான தன்னலமற்ற சர்வாதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியுள்ளார்.

நட்க்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இதற்காக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின் போது அவர் சர்வாதிகாரத்தால் மட்டுமே ஒரு நாட்டை வளர்க்க முடியும் என பேசியுள்ளார்.

அப்போது ‘நமது வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நாட்டை விற்கிறார்கள். ஊழலை சட்டம் போட்டு திருத்த முடியாது. ஒவ்வொருத்தரும் திருந்தினால்தான் முடியும். என் ஆட்சியில் ஊழல் செய்தால் நேராக டிஸ்மிஸ்தான். அவர்களின் 10 தலைமுறைக்கு அரசுப் பணி கொடுக்கமாட்டோம். தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9, 10, 11 வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அரசாணை ரத்தா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு