Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருத்தர் ஏந்துனா பிச்சை..பலர் ஏந்தினால் இலவசம்! – சீமான் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (11:12 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நா.த.க சீமான் ஒருவர் கையேந்தினால் பிச்சை.. பலர் ஏந்தினால் இலவசம் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் நா.த.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “ஒருவர் கையேந்தினால் பிச்சை. அதுவே பலர் கையேந்தினால் இலவசம். நாம் தமிழர் ஆட்சியில் மற்ற கட்சிகள் போல இலவச துவைக்கும் எந்திரம், குளிரூட்டி போன்றவை வழங்கப்படாது. ஆனால் அவற்றை மக்களே வாங்கி கொள்ளும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும். நாம் தமிழர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி, உலக தரத்திலான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments