Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு தான் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை: சீமான்

Siva
புதன், 12 பிப்ரவரி 2025 (14:52 IST)
பணக்கொழுப்பு இருப்பவர்களுக்கு தான் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை என்று   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தேர்தல் வியூகம் என்ற நோய் வந்துவிட்டதாகவும், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். முன்பு ஆட்சி செய்த காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோர் தேர்தல் வியூக அமைப்பாளரை வைத்துக் கொள்ளவில்லை என்றும், பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும், "கத்திரிக்காய் என்று  பேப்பரில் எழுதி பயன் இல்லை. நிலத்தில் இறங்கி விதை போட்டு செடியாக்கி, தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். அதுபோல தான், மேஜையில் அமர்ந்து கொண்டு தேர்தல் வியூகம் நிபுணர்கள் எழுதுவதால் எந்த பயனும் இல்லை. களத்தில் இறங்கி, களப்பணி செய்ய வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "எனக்கு மூளை இருக்கிறது, ஆனால் கேட்பதற்கு தான் காது இல்லை" என்று கூறியவர், தைப்பூசத்திற்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு ’அப்புறம் எதற்காக அவர் முருகன் மாநாடு நடத்தினார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசனை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. எம்பி ஆகிறார் உலக நாயகன்..!

குமாஸ்தா வேலையை மட்டும் பாருங்க.. கட்சி விவகாரங்களில் தலையிடாதீங்க! - தேர்தல் ஆணையத்திற்கு சி.வி.சண்முகம் கண்டனம்!

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு: 12 கேள்விகளை முன் வைத்த உச்ச நீதிமன்றம்..!

வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்..!

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments