Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக்கில் அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா? சீமான்!

டாஸ்மாக்கில் அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா? சீமான்!
, செவ்வாய், 17 மே 2022 (12:46 IST)
டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? என சீமான் கேள்வி. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0  என்ற வேட்டையை நடத்தியது. இந்த வேட்டையில் போதை பொருளான கஞ்சா மொத்ஹ்ட வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர். ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் இருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்றும் 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த செயலை பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, 
webdunia
குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்த செய்தி படித்தேன். பாராட்டுக்கள்! 
 
ஆனால் குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்களென்றால், டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? போதை பொருட்களில் சிலவற்றுக்கு தண்டனையும், சிலவற்றை அரசே விற்பதும் தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

122 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் வெப்பம்! – இந்தியாவை வாட்டும் கோடைக்காலம்!