தங்கை ஜோதிமணியை திட்டியது கண்டனத்திற்குரியது! – சீமான் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (13:16 IST)
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி கனிமொழியை பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் அவதூறாக பேசியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஜோதிமணி மற்றும் பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜன் ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காரசாரமாக விவாதம் செய்ததால் விவாதத்தின் இடையே திடீரென ஜோதிமணி எழுந்து வெளியேறிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசியதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அவமதித்ததாகவும் காங்கிரஸ் மற்றும்  கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாக பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் MP தங்கை ஜோதிமணிக்கெதிராக பாஜக கரு.நாகராஜன் தொடுத்த தனிநபர் தாக்குதலும் அருவருக்கத்தக்க அவதூறுகளும் அநாகரீகத்தின் உச்சம். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று இவ்வாறு தனிநபர் தாக்குதல் மூலம் இழித்துரைத்துப் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது!” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் “பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களை பாஜகவினர் மதிக்கிற பாங்கு இதுதானா? பாரத மாதாவின் புத்திரர்களின் 'பாரத மாதா கி ஜே' இது தானா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments