Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''உங்கள ஆளையே காணாமே!! எதுவும் பேச்சு வார்த்தையில் இருக்கீங்களா சீமான்''- திமுக நிர்வாகி டுவீட்

''உங்கள ஆளையே காணாமே!! எதுவும் பேச்சு வார்த்தையில் இருக்கீங்களா சீமான்''- திமுக நிர்வாகி  டுவீட்
, புதன், 19 அக்டோபர் 2022 (16:14 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆணையம் உண்மைத் தகவல் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு திமுக பிரமுகர்  சீமானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கலவரவம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து,  நீதியரசர் அருணா  ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த  நிலையில், முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருந்து அக்கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ள ராஜீவ்காந்தி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  மற்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆணையம் உண்மைத்தகவல் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு சீமானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், Mr.@SeemanOfficial தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உங்க சித்தப்பு பழனிச்சாமியும்,ஜெயலலிதா இறப்பில் உங்க சின்ன அத்தை சசிக்கலாவும் செய்த சதி வேலைகளை விசாரணை ஆணையங்கள் அம்பலபடுத்தியுள்ளது!!!

உங்கள ஆளையே காணாமே!! எதுவும் பேச்சு வார்த்தையில் இருக்கீங்களா சீமான்!!! என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆனபின், சென்னை –  தி நகர் இல்லத்தில் ,அவரை சீமான் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

 Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்