நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

Siva
ஞாயிறு, 30 மார்ச் 2025 (09:52 IST)
நேற்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. மதுரை, சேலம், கரூர், திருச்சி, திருவள்ளூர், திருத்தணி, வேலூர், ஈரோடு, தர்மபுரி, சென்னை, கோவை நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. இதில், மதுரையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இந்த நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும், ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை நீடித்து, அதன் பிறகு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும், வெப்பநிலை 100 டிகிரியை தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments