Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:00 IST)
நவம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும் கொரோன வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 மேலும் திருவிழாக்கள் மற்றும் அரசியல் விழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

வேங்கை வயல் சம்பவத்தில் ஒருவர் கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

மணிப்பூரில் ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு.. பெரும் பரபரப்பு..!

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்..! கொலை நடக்காத நாளே இல்லை.! இபிஎஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments