Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (07:55 IST)
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் நாளை வேலை நாள் என்பதால் இன்று இரவே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இந்நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டது
 
இந்த கோரிக்கை குறித்து கருத்து கூறிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை விடுமுறை விடுவது குறித்து தமிழக முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்று தெரிவித்தார்
 
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments