Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

Advertiesment
கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

Siva

, புதன், 27 நவம்பர் 2024 (07:52 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
திருச்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சற்றுமுன் வெளியான தகவலின் படி அரியலூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!