பள்ளி மாணவன் பரிதாப பலி...

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (19:24 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அரியதிடல் கிராமத்தைச் சேர்ந்தவர்  அமானுல்லா.

இவரது மகன் முகமது ஆதில்(16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார்.

இன்று காலையில் பள்ளிக்குச் செல்ல நரசிம்புரத்தில் இருந்து கும்பகோணம்  நோக்கிச் செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் ஓடிச் சென்று ஏற   முயன்றார்.

அப்போது  நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மாணவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு.. இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை.. நாளையும் விடுமுறையா?

போர் எதிரொலி!.. 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!...

சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதரகத்தை ட்ரோன் வைத்து தாக்கிய ஈரான்.. பழிவாங்குவேன் என டிரம்ப் சபதம்

மத்திய கிழக்கு போரால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. ஸ்தம்பித்து போன ஐரோப்பிய நாடுகள். என்ன செய்ய போகிறார் டிரம்ப்?

அடுத்த கட்டுரையில்
Show comments