Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவன் பரிதாப பலி...

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (19:24 IST)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அரியதிடல் கிராமத்தைச் சேர்ந்தவர்  அமானுல்லா.

இவரது மகன் முகமது ஆதில்(16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார்.

இன்று காலையில் பள்ளிக்குச் செல்ல நரசிம்புரத்தில் இருந்து கும்பகோணம்  நோக்கிச் செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் ஓடிச் சென்று ஏற   முயன்றார்.

அப்போது  நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மாணவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments