Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவில் மாணவர்களுக்கு மட்டன் பிரியாணி: நெகிழ வைத்த பணியாளர்!

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (13:23 IST)
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பணியாளர் பிரியாணி உணவளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் பாரிசா பேகம் என்ற பெண் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். தினமும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வரும் பாரிசா பேகத்திற்கு ஒரு நாளாவது அனைவருக்கும் பிரியாணி வழங்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.

அதை நிறைவேற்றும் விதமாக தனது சொந்த செலவில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் சுவையான மட்டன் பிரியாணி செய்து விருந்தளித்துள்ளார். தினசரி பாரிசா கையால் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் அவர் வழங்கிய பிரியாணியையும் மிகவும் சுவைத்து சாப்பிட்டுள்ளனர்.

பாரிசா பேகம் பிரியாணி விருந்து அளித்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை அளித்ததோடு, பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments