Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தின் 2 தாலுகாக்களில் பள்ளிகள் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (07:59 IST)
தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரண்டு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிரித் அவர்கள் அறிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments