Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:14 IST)
நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக நித்ய லட்சுமணவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணவேல் அடிக்கடி அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

முதலில் அதை பொறுத்துக் கொண்டிருந்த மாணவிகள் ஒரு அளவிற்கு மேல் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி தலைமை ஆசிரியர் லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஸ்டேகில் கட்டினால் கம்மி.. ரொக்கமாக கொடுத்தால் இரு மடங்கு கட்டணம்! - புதிய நடைமுறை!

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்துடன் செயல்படுகிறார்; டி.டி.வி. தினகரன் கருத்து

விஜய் வாகன ஓட்டுனர் மீதும், ரசிகர் மீது வழக்குப்பதிவு! - காவல்துறை அதிரடி!

ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதித்தாலும் ஆடம்பர கடைகளில் செலவு செய்ய தயக்கம்: இளைஞரின் பதிவு குறித்த விவாதம்

அடுத்த கட்டுரையில்