Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:14 IST)
நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக நித்ய லட்சுமணவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணவேல் அடிக்கடி அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

முதலில் அதை பொறுத்துக் கொண்டிருந்த மாணவிகள் ஒரு அளவிற்கு மேல் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி தலைமை ஆசிரியர் லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்