Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

தினகரனுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (14:50 IST)
தினகரன் மீது உள்ள அந்நிய செலாவணி மோசடி வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.


 
 
கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. தினகரன் மீது தொடரப்பட்ட இந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இந்த உத்தரவை எதிர்த்து தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் இது போன்ற வழக்கு தொடர்ந்தால் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments