காவிரி வழக்கு மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (13:18 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற கொடுத்த 6 வார கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 
 
அதைத்தொடர்ந்து மத்திய அரசு, திட்டம் என்றால் என்னவென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாம் கோரியும் மனு தாக்கல் செய்தது. 
 
இந்த இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பில் இல்லை என்றும், மே 3ஆம் தேதிக்கு வரைவு திட்டத்தை தயார் செய்து மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயிடம் இன்ஜினும் இல்ல... பெட்ரோலே இல்ல!.. போட்டு தாக்கிய அண்ணாமலை!...

புதிய எதிரிகளை நான் இப்படித்தான் பார்க்கிறேன்!.. விஜய் பற்றி பேசிய ஸ்டாலின்!...

பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார்.. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!

காலை போலவே மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரிப்பு!

2026 தமிழக தேர்தல்: தொகுதி மாறும் விஐபிக்கள் - தப்பிக்கும் யுக்தியா? வெற்றி வியூகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments