சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

Siva
புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:30 IST)
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெண் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட சவுக்கு சங்கர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தன்மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில்  மனுத்தாக்கல் செய்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: திரண்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்!

மோன்தா புயல் மையம்.. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.. ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்!

கரூரில் நடந்த கூட்ட நெரிசல்: சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரே நாளில் 4 மனுக்கள் விசாரணை..!

கரூர் துயர சம்பவ விவகாரம்: புஸ்ஸி ஆனந்துக்கு சிபிஐ அனுப்பிய சம்மன்.. தீவிர விசாரணை..!

மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments