Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமையானாலே கல்லா கட்டும் டாஸ்மாக்; இந்த வார நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (12:32 IST)
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாதிப்புகளை குறைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இவ்வாறான முழுமுடக்கம் செயல்பட்டு வரும் நிலையில் மதுப்பிரியர்கள் ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமை அன்றே மறுநாளுக்கும் தேவையான மதுவை வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

இதனால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.40.75 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. சென்னையில் 20 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments