Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமையானாலே கல்லா கட்டும் டாஸ்மாக்; இந்த வார நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (12:32 IST)
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாதிப்புகளை குறைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இவ்வாறான முழுமுடக்கம் செயல்பட்டு வரும் நிலையில் மதுப்பிரியர்கள் ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமை அன்றே மறுநாளுக்கும் தேவையான மதுவை வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

இதனால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.40.75 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. சென்னையில் 20 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments