Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாத்தூர் பட்டாசு குடோனில் தீ விபத்து; 2 மணி நேர போராட்டம்!

சாத்தூர் பட்டாசு குடோனில் தீ விபத்து; 2 மணி நேர போராட்டம்!
, வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:16 IST)
சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் திடீரென தீ பற்றியதால் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வள்ளிமயில் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. நேற்று இரவு குடோனில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக குடோனில் திடீரென தீ பற்றியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் உள்ளே ஏராளமான வெடிப்பொருட்கள் இருந்ததால் மளமளவென பற்றிய தீ விடாமல் கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பட்டாசு குடோனில் தீப்பற்றியால் பட்டாசுகள் வெடித்து சிதறியதை கேட்டு அங்கு மக்கள் கூட்டம் கூடியுள்ள. நெடுஞ்சாலைக்கு மிக அருகே குடோன் இருந்த நிலையில் தீ விரைவாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

28 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்திய நிலவரம்!