Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா: தடுத்து நிறுத்தப்படுவாரா?

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:25 IST)
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார்.
 
பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனை அடுத்து அவர் தமிழக எல்லையில் வரும்போது தடுத்து நிறுத்தப்படுவார் என்றும்,  அதிமுக கொடியை காரில் இருந்து எடுக்க வலியுறுத்த படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா புறப்பட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக தலைமையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments