Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா: தடுத்து நிறுத்தப்படுவாரா?

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:25 IST)
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்ட சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார்.
 
பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனை அடுத்து அவர் தமிழக எல்லையில் வரும்போது தடுத்து நிறுத்தப்படுவார் என்றும்,  அதிமுக கொடியை காரில் இருந்து எடுக்க வலியுறுத்த படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா புறப்பட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக தலைமையை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments