Publish Date: Mon, 25 Jan 2021 (13:31 IST)
Updated Date: Mon, 25 Jan 2021 (14:21 IST)
சசிகலா விடுதலையை காலதாமதப்படுத்த சிறைநிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக புகார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா நாளை மறுநாள் 27ம் தேதியன்று விடுதலையாக இருந்த நிலையில் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவர் ஐசியூவிலிருந்து பொது படுக்கைக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சசிகலா விடுதலையை காலதாமதப்படுத்த சிறைநிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சசிகலா ஆதரவாளர் கோரியுள்ளார்.