Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா

கணவனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா
, செவ்வாய், 20 மார்ச் 2018 (08:31 IST)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சசிகலாவின் கணவர் நடராஜன் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலா இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் .
உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன்(74) உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில். நடராஜனின் உடல் எம்பாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
நடராஜனின் உடல் சில மணிநேரம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும். இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு பரோல் கிடைத்துள்ளதால் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவர் சிறையிலிருந்து வெளியே வர இருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்