Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் இடம்பெறாததால்...சசிகலா தேர்தல் ஆணையத்தில் முறையீடு

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:45 IST)
அமமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதுஇதுகுறித்து சசிகலா தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்துவந்தார். அதனால் அவருக்கு வாக்கு அங்கேயே அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின் அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டதால் சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர் அந்த பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

சிறை தண்டனை பெற்று அவர் வெளியே வந்தும் தேர்தல் ஆணையத்தில் பேர் சேர்க்க சொல்லி விண்ணப்பித்தும் அவர் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையத்தில் இன்று சசிகலா முறையீடு செய்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் சசிகலா வாக்களிக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர். ராஜா செந்தூரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சசிகலா கடந்த மாதம் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments