எம்ஜிஆர் நினைவிடம் செல்ல சசிகலா, தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:49 IST)
எம்ஜிஆர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதிமுகவின் நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மெரினா பீச்சில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் தினகரன் சார்பில் தனித்தனியாக அனுமதி கேட்கப்பட்டது 
 
ஆனால் இந்த அனுமதிக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தினகரன் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலும் தி நகரிலுள்ள தனது இல்லத்தில் சசிகலாவும் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments