Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்புவிழா: சென்னையில் இருந்து சீதைக்கு செல்லும் வாழை நார் சேலை..!

Mahendran
புதன், 17 ஜனவரி 2024 (16:32 IST)
ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சீதைக்கு வாழைநார்  சேலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை அருகே உள்ள அனகாபுத்தூரில் சீதைக்காக வாழை நாரில் புடவை தயார் செய்து அனுப்பப்படாத திட்டமிட்டுள்ளது. பத்து நாட்களாக இரவு பகல் பாராமல் இந்த புடவையை நெசவாளர்கள் செய்து வருகின்றனர். 
 
நான்கு அடி அகலம் மற்றும் 20 அடி நீளம் கொண்ட இந்த புடவை, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்கம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புடவை தான் ராமர் கோவில் திறப்பு விழா அன்று சீதாதேவிக்கு சாத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
25 வகையான இயற்கை  நார் கொண்டு, இயற்கையான சாயங்களை கொண்டு இந்த புடவை  தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மஞ்சள் மற்றும் இண்டிகோ நிறத்தில் இந்த புடவை இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments