Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்புவிழா: சென்னையில் இருந்து சீதைக்கு செல்லும் வாழை நார் சேலை..!

Mahendran
புதன், 17 ஜனவரி 2024 (16:32 IST)
ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சீதைக்கு வாழைநார்  சேலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை அருகே உள்ள அனகாபுத்தூரில் சீதைக்காக வாழை நாரில் புடவை தயார் செய்து அனுப்பப்படாத திட்டமிட்டுள்ளது. பத்து நாட்களாக இரவு பகல் பாராமல் இந்த புடவையை நெசவாளர்கள் செய்து வருகின்றனர். 
 
நான்கு அடி அகலம் மற்றும் 20 அடி நீளம் கொண்ட இந்த புடவை, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்கம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புடவை தான் ராமர் கோவில் திறப்பு விழா அன்று சீதாதேவிக்கு சாத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
25 வகையான இயற்கை  நார் கொண்டு, இயற்கையான சாயங்களை கொண்டு இந்த புடவை  தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மஞ்சள் மற்றும் இண்டிகோ நிறத்தில் இந்த புடவை இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments