Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு என நீதிமன்றம் கூறியுள்ளது: சரத்குமார்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (14:22 IST)
ஆன்லைன் ரம்மியை நீதிமன்றங்கள் அறிவுபூர்வமான விளையாட்டு என கூறி இருக்கின்றன என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் பிறப்பித்தாலும் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுபூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை என்றாலும் பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று தெரிவித்தார். 
 
இதனை சிந்தித்து இந்தியா முழுவதும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு மாநில அரசு மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதற்கு தான் வரவேற்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments