Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்கு நடந்தே செல்வேன்: சரத்குமார் அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (20:39 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்தமாக மத்திய அரசை நோக்கி குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டி வருகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியும் வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது பங்கிற்கு ஒரு அதிரடி அறிவிப்பை அறித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு நடந்தே செல்லும் போராட்டத்தை தொடங்குவேன் என்று கூறியுள்ளார். சரத்குமாரின் இந்த அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் வரவேற்பையும் கிண்டலையும் மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments