Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, கமலுக்கு பூஜ்யம் தான் கிடைக்கும்: துணை முதல்வர் ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (20:23 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளது அதிமுக, திமுக உள்பட முன்னணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் இவர்கள் இருவரின் செல்வாக்கு எப்படி இருக்கின்றது என்பது வரும் தேர்தலில்தான் தெரியவரும்

இந்த நிலையில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் ரஜினி-கமலை விமர்சனம் செய்வதில் மட்டும் ஒற்றுமையை கடைபிடித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாதனை விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ரஜினி-கமலை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது: அரசியலுக்கு புதிது புதிதாக ஒருசிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள். சிலர் கருத்து கந்தசாமியாக இருக்கிறார்கள். அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கப்போகிறது என்று கூறினார்.

வரும் தேர்தலில் பூஜ்யம் கிடைக்கப்போவது ரஜினி-கமலுக்கா, அல்லது அவர்களை விமர்சனம் செய்பவர்களுக்கா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments