Publish Date: Thu, 19 May 2016 (14:40 IST)
Updated Date: Thu, 19 May 2016 (14:43 IST)
திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் தோல்வியடைந்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் ஆரம்பம் முதலே பின்னடைவில் இருந்தார்.
கடந்த தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரத்குமார், இந்த தேர்தலில் திருச்செந்தூரில் களம் இறங்கினார். திருச்செந்தூரில் செல்வாக்குடன் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனை களம் இறக்கியது திமுக.
இந்நிலையில் ஆரம்பம் முதலே கவனிக்கப்பட்டு வந்த இந்த விஐபி தொகுதியில் சரத்குமார் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார். நடிகர் சங்க தேர்தல் தோல்வியை தொடர்ந்து இந்த தேர்தலிலும் சரத்குமார் தோல்வியடைந்துள்ளார்.