Publish Date: Fri, 26 Feb 2021 (21:34 IST)
Updated Date: Fri, 26 Feb 2021 (21:59 IST)
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் அகில இந்திய மக்கள் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது
அதேபோல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சரத்குமார் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயகக் கட்சியும் இணைந்து புதிய மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளனர்
ஏற்கனவே சரத்குமார் மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்த நிலையில் அவர் புதிய மாற்றத்திற்கான கூட்டணி என்பதை சசிகலா கூட்டணியை தெரிவித்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது