Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா தேவி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்தார் சந்தானம்!

Webdunia
திங்கள், 14 மே 2018 (19:33 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி, அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் தவறாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு உதவியதாக முருகன் மற்றும் கந்தசாமி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
சந்தானம் குழு விசாரணை நடத்தி முடித்துவிட்டு, வரும் மே 15 ஆம் தேதி விசாரணை அறிக்கையை சமர்பிக்கவுள்ள நிலையில், அறிக்கையை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், தற்போது சந்தானம் நிர்மலா தேவி வழக்கில் இதுவரை நடந்த விசாரணை மற்றும் பிற செய்திகளை அறிக்கையாக அளுநரிடம் சமர்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments