Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் திடீர் நீக்கம்.. மீண்டும் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..!

Mahendran
புதன், 5 பிப்ரவரி 2025 (10:11 IST)
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது திடீரென மூன்று ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ள நிலையில், இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழக அரசு இதில் தலையிட்டு இரு தரப்பினருடனும் பேசி, வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ், சிவனேசன், குணசேகரன் ஆகிய மூவரையும் சாம்சங் நிர்வாகம் திடீரென தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments