Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள் கைது: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:05 IST)
யூடியூப் பார்த்து ஏராளமான நல்ல விஷயங்களை மக்கள் கற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பார்த்து சில மோசமான விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த மாதம் நவீன் சக்கரவர்த்தி, தஞ்சை பிரகாஷ் ஆகிய இருவரிடம் முழுமையாக தயாரிக்க படாமல் இருந்த துப்பாக்கி கத்தி ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகளும் கைதான இருவரையும் விசாரித்தனர் 
 
அப்போது இருவரும் தாங்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பது எப்படி என கற்றுக் கொண்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் இந்த இளைஞர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments