Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை சிறைச்சாலை அருகே குப்பைத்தொட்டியில் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்

gun madurai
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:44 IST)
மதுரை சிறைச்சாலை அருகே குப்பைத்தொட்டியில் துப்பாக்கி: அதிர்ச்சி தகவல்
மதுரை சிறைச்சாலை அருகே உள்ள குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டியில் ஒரு கையடக்க துப்பாக்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டனர்
 
தூய்மைப் பணியாளர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர் 
 
இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் துப்பாக்கியை கடத்தப்பட இருந்ததா? சிறையிலுள்ள யாரையாவது கொலை சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் மற்றும் கொள்கிறேன்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் பதில் சொல்ல தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி