Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

hang
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:28 IST)
சேலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
 
சேலம் அருகே ஆத்தூர் என்ற பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் தினேஷ் குமார் என்பவர் அந்த சிறுமி தனது தாயிடம் இதுகுறித்து கூறியதால் ஆத்திரமடைந்த சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இளைஞர் தினேஷ்குமார் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்