Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி..! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (14:37 IST)
சேலத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் மேச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள மேச்சேரி அரசு உயர்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தந்தையை இழந்த மாணவியை அவரது பெரியப்பா தினமும் பள்ளியில் கொண்டு வந்து விட்டு செல்வது வழக்கம்.

காலை பள்ளியில் ப்ரேயர் நடந்த நிலையில் அங்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அமர்ந்திருந்த மாணவி திடீரென தனது வகுப்பறை இருந்த மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமி மாடியிலிருந்து விழுந்ததை கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவியை சந்தித்து நலம் விசாரித்த சேலம் கலெக்டர், மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாகவும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

இந்தியாவில் இதுவரை 3 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! மாஸ்க் அணிய வலியுறுத்தல்!

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments