Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த தம்பதியினர்.. சேலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த தம்பதியினர்.. சேலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:21 IST)
சேலம் அருகே ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கொலையை அந்த வீட்டில் தங்கி இருந்த தம்பதியினர் செய்திருப்பார்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் சூரமங்கலம் புது ரோடு என்ற பகுதியில் புதிதாக கணவன் மனைவி என ஒரு தம்பதியினர்  குடி வந்ததாகவும் அந்த வீட்டிற்கு மறுநாளே புதிய இளைஞர் ஒருவர் வந்ததாகவும் தெரிகிறது.

மூவரும் போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  புதிதாக குடிவந்த தம்பதி இருந்த வீட்டின் மொட்டை மாடியில் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து உடனே போலீசார் அந்த நபரை பரிசோதனை செய்தபோது அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருந்தது தெரிந்து வந்தது. அதுமட்டுமின்றி அந்த வீட்டில் குடியிருந்த தம்பதிகள் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

`தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட அதிகமாக நிதி கொடுத்திருக்கிறோம்; அமைச்சர் நிர்மலா சீதாராமன்