Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக விலைக்கு மதுபானம் விற்பனை....தனியார் மதுபான கடைக்கு தற்காலிக அனுமதி ரத்து

Webdunia
சனி, 20 மே 2023 (22:25 IST)
திருப்பூர் மாவட்டம் பல்லத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அதிக விலைக்கு மதுபானம் விற்றதாகப் புகார் எழுந்த நிலையில், அந்த விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் ரூ.300க்கு பீர் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த தனியார் விடுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, மதுபாட்டில்களின் இருப்பு மற்றும் விற்பனை பற்றிய முறையான கணக்குகள் எதுவும் இல்லாததைக் கண்டறிந்தனர்.

இந்த நிலையில்,  அதிகவிலைக்கு மதுவிற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுபான விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில, ''திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட க்ளப் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments